Monday, July 11, 2016

Selcted verses from bagavad Gita..


Chapter 3. Verse 14

அந்நாத்  பவந்தி பூதாநி
பர்ஜன்யராத் அன்ன சம்பவஹ
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யக்ஞாஹ  கர்ம ஸமுத்பவஹ

अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यदन्नसम्भव:
यज्ञाद् भवति पर्जन्यो यज्ञ: कर्म समुद्भव:

annAd bhavanti bhUtaani parjanyadannasambhava:
yaGYaad bhavati parjanyo yaGYa: karma samudbhava:

மிகவும் அழகான  ஸ்லோகம். இந்த உலகில் உள்ள உயிர்கள்  எல்லாமே அன்னம் அல்லது உணவு மூலமாகவே  உற்பத்தி ஆகின்றன. அந்த உணவோ மழையினால் தான் உற்பத்தி ஆகின்றது. மழையோ யக்ஞங்களினால் தான் உற்பத்தி ஆகின்றன. கர்மம் அல்லது செயலர்கள்(வேதத்தில் சொல்லப் பட்ட) மூலமாக யஞம் உண்டானது.


Chapter 3 Verse 27

प्रक्रुते: क्रियमाणानि गुणै: कर्माणि सर्वश:
अहंकारविमूढात्मा कर्ताहमिति मन्यते

ப்ரக்ருதே  க்ரியமானானி    குணை : கர்மானி  சர்வச:
அஹம்காரவிமுதாத்மா   கர்த்தாஹாமிதி    மன்யதே

prakrute: kriyamaaNaani guNai: karmaaNi sarvasha:
aha.mkaaravimUDhaatmaa kartaahamiti manyate


பிரகிருதியின்   செயல்பாட்டினால் சத்வம், ராஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் குணங்களுக்கு உட்பட்டவாகி ஒருவன் அந்த அந்தக் காரியங்களை செய்கின்றான். ஆனால் ஒருவனுடைய அஹம்காரத்தினால் தானே அதனைச் செய்வது போலே நினைத்துக் கொள்கிறான். யதார்த்தம் என்ன வென்றால் ப்ரக்ருதி என்று சொல்லப் படும் மாயைக்கு உட்பட்டு ஒருவன் எந்தச் செயலையும்  செய்கின்றான். (இறைவன் அடியில் சரண் புகுவதே அந்த மாயையில் இருந்தும் விடுபட ஒரே வழி).

Chapter 4 Verse 7:

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानम् स्रुजाम्यहम् ॥

யதா யதா  ஹி  தர்மஸ்ய  க்ளாநிரபாவதி பாரத |
அபியூத்தானம்  அதர்மஸ்ய  ததாத்மானம்  ஸ்ருஜாம்யஹம் ||

yadaa yadaa hi dharmasya glaanirbhavati bhaarata |
abhyutthaanam adharmasya tadaatmaanam srujaamyaham ||

அர்ஜுனா: எப்பொழுது ஆவதும் எங்கே ஆவதும் தர்மம் நிலை குலைந்து அதர்மம் மேலோங்கி நின்றால் அங்கே நான்  அவதரிக்கிறேன்.

Chapter 4 Verse 8:

परित्राणाय साधुनाम् विनाशाय च दुश्क्रुताम्
धर्मसंस्तापनार्थाय सम्भवामि युगे युगे

பரித்ராணாய    சாதூனாம்  வினாஷாய  ச  துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்த்தாய   சம்பவாமி  யுகே  யுகே

paritraaNaaya saadhunaam vinaashaaya cha dushkrutaam
dharmasa.mstaapanaarthaaya sambhavaami yuge yuge

சாதுக்களைக்  காப்பாற்றுவதற்க்காகவும், துஷ்டர்களை ஒழிப்பதற்காகவும் , தர்மத்தை ஸ்தாபிப்பதற்க்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கின்றேன்.

Chapter 4 Verse 13:

चातुर्वर्न्यम् मया स्रुष्टम् गुण कर्म विभगश |
तस्य कर्तारमपि माम् विद्दियकर्तरमव्ययम् ||

சாதுர்வர்ணயம்  மாயா  ஸ்ருஷ்டம்  குண  கர்ம  விபாகசா :
தஸ்ய  கர்த்தாராமபி  மாம்  வித்தி  அகார்தாரமவ்யயம் .

caaturvarnyam mayaa sruShTam guNa karma vibhagasha:
tasya kartaaramapi maam viddiyakartaramavyayam

(பிறப்பால் மட்டும் அன்றி) குண (சத்வம், ராஜஸ்ஸு,தமஸ்ஸு) , கர்மங்களாலும் நன்கு வர்ணங்கள் ஸ்ருஷ்டிக்கப் பட்டன (பகவானால்). அந்த காரியங்களை எல்லாம் செய்தாலும் இந்தக் கரமங்களிலே   இருந்து எல்லாம் விலகி , (தான் ஆத்ம ஸ்வரூபத்திலே இருந்து) மாற்றம் இல்லாதவனி பகவான் இருக்கின்றான்.

BajaGovindam

ஆதி சங்கரர் இயற்றிய கிரந்தங்களிலே மிஹவும் எளிமையானதும்  ப்ரசிட்தி பெற்றதும் இந்த பஜ கோவிந்தம் என்னும் கிரந்தம்(கவிதை / இலக்கியம்/ புஸ்தகம்). இப்பொழுது இந்தக் கிரந்தத்திலே உள்ள முத்துக்களை அனுபவிப்போம்.

நாரியஸ்தனபார  நாபியிடேஷம்  திருஷ்டிவா  மஹாமோஹாவேஷம்

नारीस्तनभर नाभीदेशं द्ऱुश्ट्वा मागामोहावेशम्

naariistanabhara naabhiideshaM dRushTvaa maagaamohaavesham

பெண்களின் மார்பகம் மற்றும் வயிற்றுப பகுதியைக் கண்டு மொஹாவேஷபி படாதே !

எத்தனமாம்ஸாவசாதி    விகாரம் மனசி   விசிந்தய  வாரம்  வாரம் !

एतन्मांसावसादि विकारं मनसि विचिन्तय वारं वारं

etanmaaMsaavasaadi vikaaraM manasi vichintaya vaaraM vaaraM

பெண்களின் அங்கங்கள் (ஸ்தனபாரம் மற்றும் நாபிப் பகுதி) வேறொன்றும் இல்லை - அது தசையின் வளர்ச்சியே என்பதை மீண்டும் மீண்டும்  மனதிலே யோசித்துக் கொள்.

யாவதிப்பவனோ  நிவசதி  தேஹே   டாவதிப்ரிச்ச்சதி  குசலம்  கேஹே

यावत्पवनो निवसति देहे तावत्प्ऱिच्छति कुशलं गेहे

உடம்பில் காற்று/பிராணன் உள்ள மட்டிலும் அனைவரும் நலம் விசாரிப்பார்கள்.

கதவாதி  வாயூ   தேஹாபாயே பார்யா  பிபியத்தி    தஸ்மின்காயே

गतवति वायौ देहापाये भार्या बिभ्यति तस्मिन्काये 

ஆனால், அதே பிராணன் உடம்பில் இருந்து கிளப்பி வெளியே போன பிறகு, சொந்தம் மனைவி மக்களும், சுற்றத்தாரும் பிணம் என்று பயந்து ஓடுவார்கள்.

காதே  காந்தா  கோஸ்தே  புத்திர  சம்சாரா .யமதிவ  விசித்திர  .
काते कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः ।

மனைவி யார்? மக்கள் யார்? இந்த சம்சார வாழ்க்கையே ஒரு விசித்திரமானது.  .
கசிய  த்வம்  கஹ்  குத்த  ஆயாதாஹ்  தத்த்வம்    சிந்தாயா  தடிஹ  பிராதஹ்.

कस्य त्वं कः कुत आयातः तत्त्वं चिन्तय तदिह भ्रातः ।

யார் நீ? எதற்காக இங்கே வந்தாய் என்பதை யோசித்துப் பார் சகோதரா !
அகில உலகத்திற்கும் வேதாந்த குருவாக விளங்கும் நம் சங்கர பகவாடப்பதற் , எளிமையின் சிகரமாகி சோதர அல்லது அண்ணா என்று சொல்கின்றார். எவ்வளவு அருமை என்று பாருங்கள்.

Selected Verses from Soundarya lahari

சௌந்தர்ய லஹரி என்னும் கிரந்தம் ஆதி   சங்கரரால் தொகுத்து வழங்கப் பட்டது. இன்றைக்கு வயிற்றுப பிழைப்புக்கு வேண்டி என்ன என்னமோ   செய்கிறோம்  - ஆனால் இந்த அத்யாத்ம  கிரந்தத்தை இங்கு அனுபவிப்போம். இதன் மஹிமையை அளவிடவே முடியாது. அன்னையின் புகழை மிக அழகாக  இங்கு நமது ஆசிரியயர் கூறுகின்றார்.

ஶிவஃ ஶக்த்யா யுக்தோ யதி பவதி ஶக்தஃ ப்ரபவிதும்
ன சேதேவம் தேவோ ன கலு குஶலஃ ஸ்பன்திதுமபி|
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி|| 1 ||

முதல் ஸ்லோகத்திலேயே இங்கு ஆதி சங்கரர், முற்பிறவிகளின் புண்ணியம் (பூர்வ சுக்ருதம்) இல்லாதவர்கள் அம்பாளைப் பூஜிக்க முடியாது என்று சொல்கின்றார். மனிதராகப் பிறப்பது மிகவும் அரிது, அதிலும் நல்ல குலத்திலே நம்முடைய பாரத தேசத்தில் பிறப்பது இன்னும் அரிது. அப்படிப் பிறந்து பக்தி, ஞானம், போன்ற அறிய பண்புகள் கொண்டு விளங்குவது இன்னும் அரிது. அப்படி இருந்தும், அம்பாளை பரதேவதையாகப்  பாவித்து வழிபட வேண்டும் என்றால், இன்னும் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ப்ரஹ்ம ஸ்வரூபமாக  இருக்கும் அந்த சிவம் , மாயையின் வடிவாக இருக்கும் சக்தியின் சேர்க்கை இன்றி ஒரு காரியமும் செய்ய இயலாது. அவளுடைய சேர்க்கை இன்றி ஒரு துரும்பையும் கூட சிவனால் அசைக்க இயலாது. அவ்வளவு புகழ் வாய்ந்த அம்பிகையை ஹரி, ஹரன், பிரம்மா போன்றவர்கள் எல்லாம் வந்து வழிபட்டார்கள். அப்படி இருக்கையில், பூர்வ  ஜென்மங்களில் புண்ணியம் செய்யாதவர்கள் எப்படி அவளை வந்து வழிபட முடியும் ?
ஆச்சார்யர் இங்கே அம்பாள் உடைய பெருமைகளையும், அவளுடைய பக்தர்களின் பெருமையையும் மிக அழகாக்க  கூறுகின்றார்.

தனீயாம்ஸும் பாம்ஸும் தவ சரண பங்கேருஹ-பவம்
விரிம்சிஃ ஸம்சின்வன் விரசயதி லோகா-னவிகலம் |
வஹத்யேனம் ஶௌரிஃ கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்
ஹரஃ ஸம்க்ஷுத்-யைனம் பஜதி பஸிதோத்தூள னவிதிம்|| 2 ||

முதல் ஸ்லோகத்தில் புண்ணியம் இல்லாதவர்களுக்கு அம்பாள்  உடைய பக்தி  வராது என்று சொல்லி ஆகி விட்டது. இப்பொழுது அவளுடைய திருப்பாத தூளியின் மஹிமையை இங்கு சொல்லுகின்றார் நம் ஆச்சாரியார்.  அம்பாளின் திருப்பாதங்க்ளின்   பொடி (தூளி) யை ப்ரம்மா எடுத்துத் , தன்னுடைய ஸ்ருஷ்டி காரியம் தடை இன்றி நடக்க , தன்னுடன் வைத்துக் கொண்டார். அதே போலே, ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன், அதனை இந்த உலகங்களை எல்லாம் தாங்குவதற்காக, தான் தலையிலே இட்டுக் கொண்டான். ஹரன் என்ற ருத்ரனும் , அதனை திரு நீராக இட்டுக்கொண்டான். அவளுடைய பாத துளியின் மஹிமையை இங்கே பார்க்கின்றோம் - படைத்தல், காதல், அளித்தல் என்ற முத்தொழில்களை செய்வதற்கு அது ஹேதுவாக  உள்ளது.