Monday, July 11, 2016

Selcted verses from bagavad Gita..


Chapter 3. Verse 14

அந்நாத்  பவந்தி பூதாநி
பர்ஜன்யராத் அன்ன சம்பவஹ
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யக்ஞாஹ  கர்ம ஸமுத்பவஹ

अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यदन्नसम्भव:
यज्ञाद् भवति पर्जन्यो यज्ञ: कर्म समुद्भव:

annAd bhavanti bhUtaani parjanyadannasambhava:
yaGYaad bhavati parjanyo yaGYa: karma samudbhava:

மிகவும் அழகான  ஸ்லோகம். இந்த உலகில் உள்ள உயிர்கள்  எல்லாமே அன்னம் அல்லது உணவு மூலமாகவே  உற்பத்தி ஆகின்றன. அந்த உணவோ மழையினால் தான் உற்பத்தி ஆகின்றது. மழையோ யக்ஞங்களினால் தான் உற்பத்தி ஆகின்றன. கர்மம் அல்லது செயலர்கள்(வேதத்தில் சொல்லப் பட்ட) மூலமாக யஞம் உண்டானது.


Chapter 3 Verse 27

प्रक्रुते: क्रियमाणानि गुणै: कर्माणि सर्वश:
अहंकारविमूढात्मा कर्ताहमिति मन्यते

ப்ரக்ருதே  க்ரியமானானி    குணை : கர்மானி  சர்வச:
அஹம்காரவிமுதாத்மா   கர்த்தாஹாமிதி    மன்யதே

prakrute: kriyamaaNaani guNai: karmaaNi sarvasha:
aha.mkaaravimUDhaatmaa kartaahamiti manyate


பிரகிருதியின்   செயல்பாட்டினால் சத்வம், ராஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் குணங்களுக்கு உட்பட்டவாகி ஒருவன் அந்த அந்தக் காரியங்களை செய்கின்றான். ஆனால் ஒருவனுடைய அஹம்காரத்தினால் தானே அதனைச் செய்வது போலே நினைத்துக் கொள்கிறான். யதார்த்தம் என்ன வென்றால் ப்ரக்ருதி என்று சொல்லப் படும் மாயைக்கு உட்பட்டு ஒருவன் எந்தச் செயலையும்  செய்கின்றான். (இறைவன் அடியில் சரண் புகுவதே அந்த மாயையில் இருந்தும் விடுபட ஒரே வழி).

Chapter 4 Verse 7:

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानम् स्रुजाम्यहम् ॥

யதா யதா  ஹி  தர்மஸ்ய  க்ளாநிரபாவதி பாரத |
அபியூத்தானம்  அதர்மஸ்ய  ததாத்மானம்  ஸ்ருஜாம்யஹம் ||

yadaa yadaa hi dharmasya glaanirbhavati bhaarata |
abhyutthaanam adharmasya tadaatmaanam srujaamyaham ||

அர்ஜுனா: எப்பொழுது ஆவதும் எங்கே ஆவதும் தர்மம் நிலை குலைந்து அதர்மம் மேலோங்கி நின்றால் அங்கே நான்  அவதரிக்கிறேன்.

Chapter 4 Verse 8:

परित्राणाय साधुनाम् विनाशाय च दुश्क्रुताम्
धर्मसंस्तापनार्थाय सम्भवामि युगे युगे

பரித்ராணாய    சாதூனாம்  வினாஷாய  ச  துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்த்தாய   சம்பவாமி  யுகே  யுகே

paritraaNaaya saadhunaam vinaashaaya cha dushkrutaam
dharmasa.mstaapanaarthaaya sambhavaami yuge yuge

சாதுக்களைக்  காப்பாற்றுவதற்க்காகவும், துஷ்டர்களை ஒழிப்பதற்காகவும் , தர்மத்தை ஸ்தாபிப்பதற்க்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கின்றேன்.

Chapter 4 Verse 13:

चातुर्वर्न्यम् मया स्रुष्टम् गुण कर्म विभगश |
तस्य कर्तारमपि माम् विद्दियकर्तरमव्ययम् ||

சாதுர்வர்ணயம்  மாயா  ஸ்ருஷ்டம்  குண  கர்ம  விபாகசா :
தஸ்ய  கர்த்தாராமபி  மாம்  வித்தி  அகார்தாரமவ்யயம் .

caaturvarnyam mayaa sruShTam guNa karma vibhagasha:
tasya kartaaramapi maam viddiyakartaramavyayam

(பிறப்பால் மட்டும் அன்றி) குண (சத்வம், ராஜஸ்ஸு,தமஸ்ஸு) , கர்மங்களாலும் நன்கு வர்ணங்கள் ஸ்ருஷ்டிக்கப் பட்டன (பகவானால்). அந்த காரியங்களை எல்லாம் செய்தாலும் இந்தக் கரமங்களிலே   இருந்து எல்லாம் விலகி , (தான் ஆத்ம ஸ்வரூபத்திலே இருந்து) மாற்றம் இல்லாதவனி பகவான் இருக்கின்றான்.

No comments: